நடிகை ஜோதிகா தனது காம்பேக்க்கு பிறகு வருடத்துக்கு ஒரு படமாவது நடித்து விடுகிறார். சென்ற ஆண்டு மகளிர் மட்டும் படத்தில் நடித்தவர் இந்த ஆண்டு மூன்று படங்களில் நடித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பாலாவின் நாச்சியார் படத்தில் ஒரு மாறுபட்ட வேடத்தில் காவல்துறை அதிகாரி நாச்சியாராக கலக்கிய ஜோதிகா அடுத்ததாக மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தில் தோன்ற உள்ளார்.



இந்த படத்தில் ஜோதிகா சித்ரா என்ற வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் அரவிந்த் சாமியின் ஜோடியாக நடித்துள்ள அவர் தனது கணவர் வரத்தான் ஒரு கேங்ஸ்டர் என்றாலும் கூட அவருக்கு துணை நிற்கும் மனைவியாகவும் தனது கணவரின் முரட்டு தனத்தால் குடும்பமும் தம்பிகளும் சிதறுவதை பார்க்கும் பெண்ணாகவும் நடித்துள்ளார்.



இவரது கதாபாத்திரம் ஆய்த எழுத்து படத்தில் மாதவனின் மனைவியாக மீரா ஜாஸ்மின் நடித்த பாத்திரத்தை போல் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த படத்தை அடுத்ததாக ஜோதிகா ராதா மோகன் இயக்கத்தில் காற்றின் மொழி படத்தில் ஆக்டொபரில் திரையில் தோன்ற உள்ளார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: