புதுடில்லி:
கத்தியைக் கூட ஒழுங்காக பிடிக்க தெரியவில்லை என்று கேலி பேசினாள்... அதான் கொலை செய்தேன் என்று கொடூர கொலைகாரன் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் போலீசாரையே அதிர வைத்துள்ளது. 


டில்லியில் இளம் பெண் ஆசிரியரை பட்டப்பகலில் 24 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கொலைகாரனின் இந்த வாக்குமூலம்தான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 


டில்லி ரயில் நிலையம் அருகே பட்டப்பகலில் கருணா என்ற இளம்பெண் ஆசிரியையை ஒரு வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் 24 முறை குத்திக் கொன்ற வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் திகிலை ஏற்படுத்தியது. 

Image result for delhi 24 times

அந்த பெண்ணை கொலை செய்த சுரேந்தர் என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவனிடம் விசாரணை செய்த போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.


சுரேந்தருக்கும், கருணாவுக்கும் 2012ம் ஆண்டு முதல் பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரச்னையாகி விட்டது. இருப்பினும் சுரேந்தர் கருணாவிடம் நட்பை புதுப்பிக்க முயன்றுள்ளர். ஆனால், கருணா, மோகித் என்பவரை காதலித்து வருவது தெரியவந்துள்ளது.  


 இதனால் ஆத்திரம் அடைந்த சுரேந்தர் தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலால் கருணாவை குத்தியுள்ளார். அவரின் முதல் குத்து கருணாவின் தோள்பட்டையில் விழுந்துள்ளது.


அப்போது கத்தியை கூட உனக்கு ஒழுங்காக பிடிக்கத் தெரியவில்லை என்று கருணா கேலி செய்துள்ளார். இதனால்தான் கோபத்தின் உச்சிக்கே சென்று அவரை 24 முறை கொடூரமாக குத்தி கொலை செய்தேன் என்று  போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலம்தான் டில்லி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 



మరింత సమాచారం తెలుసుకోండి: