சென்னை:
கடும் போட்டி... இவர்கள் இருவருக்கு இடையில்தான் என்று கோலிவுட் கோகிலா பற்ற வைத்துள்ளார் ஒரு செய்தியை...


என்ன விஷயம் என்றால்... நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரத்தை தேர்வு செய்யறது... அதிக சம்பளம் என நயன்தாரா- த்ரிஷா இடையில்தான் கடும் போட்டியாம்ங்க... 


நயன்தாரா, தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் என்று வெற்றிப்படங்களாக கொடுத்து தன் சம்பளத்தை 2 கோடி ரூபாய் வரை உயர்த்திட்டார்.


மறுபக்கம் த்ரிஷா என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து, நாயகி, மோகினி படங்களில் நடித்து வருகிறார். இளவரசன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க, 'கமிட்' ஆகி உள்ளார். 


5 வேடங்களில் நடிக்கும், த்ரிஷாவுக்கு, ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருக்காம்.


இருந்தாலும் நயன்தாராவின் அருகில் நெருங்க முயற்சி செய்தாலும் த்ரிஷாவால் முடியாமல்தான் போகும் என்று சொல்றாங்க... சொல்றாங்க... 



మరింత సమాచారం తెలుసుకోండి: