நேற்று அறிமுகமான நடிகையர் கூட ஏகப்பட்ட படங்களுடன் கல்லா காட்டுகின்றனர். முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேருகின்றனர்.


நான் நடிக்க வந்து எட்டு ஆண்டுகளாகியும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லையே என புலம்பி வந்த ஆந்திர அழகி பிந்து மாதவி இப்போது சற்று நிம்மதி அடைந்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஜாக்சன் துரை' படத்தில் தன் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பால் சந்தோஷத்தில் இருக்கிறார்.


இன்னும் இரண்டு படங்கள் தொடர்ச்சியாக ஹிட் அடித்து விட்டால் நானும் முதல் வரிசை ஹீரோயினாகி விடுவேன். சம்பளமும் எகிறும் என நம்பிக்கையுடன் வலம் வருகிறார். தெலுங்கு பக்கம் படையெடுக்கும் திட்டத்தையும் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: