'வெற்றிவேல்' திரைப்படத்தை அடுத்து சசிகுமார் நடிப்பில் 'கிடாரி' திரைப்படம், அண்மையில் வெளிவந்தது. இந்த படம் தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது. 


இந்நிலையில் சசிகுமார் அடுத்து அறிமுக இயக்குனர் பிரகாஷ் இயக்கவுள்ள புது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் கிராம பின்னனியில் உருவாக இருக்கிறதாம். இதற்காக அவர் தனது கெட்டப்பை தற்போது மாற்றி வருகிறார்.


இதன் படப்பிடிப்பு வரும் செப் 14-ந்தேதி, தேனியில் தொடங்குகிறது. மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: