கிளிநொச்சி:
இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் சந்தையில் ஏற்பட்ட தீ பற்றி எரிந்ததால் 10 மணிநேரம் தீயணைப்பு வண்டிகள் மிகுந்த போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. 


இலங்கையின் கிளிநொச்சியில் பொது சந்தை உள்ளது. இங்குள்ள ஒரு கடையில் தீப்பிடித்தது. தொடர்ந்து இந்த தீ மளமளவென அருகிலுள்ள கடைகளுக்கு பரவியது. பற்றி எரிந்த தீயின் வேகத்தால் கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. 


தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க கடும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.


இதில் 60-க்கும் அதிகமான கடைகள் எரிந்து சாம்பலானது. சேதம் பல கோடி ரூபாய் இருக்கலாம் என்று தெரிகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



మరింత సమాచారం తెలుసుకోండి: