சென்னை:
இருமுகனின் வெற்றி சம்பளத்தை ஏறுமுகமாக்கி உள்ளதாக கோலிவுட் கோகிலாக்கா தகவல் சொல்லியிருக்காங்க... சொல்லியிருக்காங்க...


என்ன விஷயம் என்றால்... வெற்றி, தோல்வி என்று எது வந்தாலும் தனது உழைப்பை கொஞ்சம் கூட குறைத்து கொள்ளாதவர் விக்ரம். ஐ படத்தின் வெற்றி, அடுத்த படத்தின் தோல்வி என்று இருந்தாலும் தற்போது இருமுகன் இவரை மீண்டும் உச்சத்தில் கொண்டு போய் சேர்ந்துள்ளது.


இதனால் இத்தனை வருடமாக உயர்த்தாமல் இருந்த தன் சம்பளத்தை டபிள் டிஜிட்டிற்கு அட அதாங்க.... ரூ.10 கோடிக்கு மேல் உயர்த்தி இருக்காராம். சாமி பார்ட்-2 படத்திற்காக விக்ரம் வாங்கியுள்ள தொகை ரூ.12 கோடி என்று சொல்றாங்க... உழைப்பு இமயம் அளவுக்கு கொடுக்கும் போது இவருக்கு இந்த சம்பளம் கொடுப்பதில் தப்பே இல்ல என்கின்றனர். இது எப்படி இருக்கு!


మరింత సమాచారం తెలుసుకోండి: