பநீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹண்ட்வாரா பகுதியில் உள்ள போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாராவில் உள்ள போலீஸ் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். 


துப்பாக்கி சூடு நடத்திய உடன் அங்கிருந்து அவர்கள் தப்பி சென்று விட்டனர். ஆனால் பாதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. 
உரி தாக்குதல் அரங்கேறிய அடுத்த நாளே இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. உரி தாக்குதலில் 18 வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. 



మరింత సమాచారం తెలుసుకోండి: