சென்னை:
அதிர்ச்சியோ... அதிர்ச்சி என்று ஒரு செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


என்னவென்றால்... சூப்பர்ஸ்டாரின் இளைய மகள் தன் கணவரை பிரிய போகிறார் என்ற அதிர்ச்சி தகவல்தான் அது. இதுகுறித்து ஒரு ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டு இருக்கிறது. இருப்பினும் இதற்கு எவ்வித மறுப்பும் சூப்பர் ஸ்டார் குடும்பத்திலிருந்து வராததால் பெரும் குழப்பம் நிலவுகிறது கோலிவுட்டில். 


ரஜினி மகள்கள் இருவருமே வேலை, குடும்பம் என அழகாக கவனித்து வருகின்றனர். ஆனால் இளைய மகள் சௌந்தர்யா ரஜினியின் வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டுள்ளதாம்.


சௌந்தர்யாவுக்கும்... தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது நான்கு மாதங்களாக இந்த தம்பதிக்கு இடையில் உரசலோ... உரசலாம்...


இதனால் இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாக ஒரு முன்னணி ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளது. ஆனால் இந்த தம்பதி இதுகுறித்து எவ்வித மறுப்பும் தெரிவிக்காததுதான் மர்மமாக உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: